பல்லவி
நின்னே நம்மிதி நிஜமுக3 க3தி லோகமுலோ
அனுபல்லவி
1நன்(ன)ட3 சலுபக3 நா விசாரமு தீ3ர்சி-
2(ன)ம்போ3-ரு(ஹா)னனா தி3வ்ய-தர ஜூசி 3ப்ரஸன்ன முக2மு (நின்னே)
சரணம்
நீ மஹாத்ம்யமு எவரே நிதா3னிம்ப ஸ1க்யமு கா3து3 க3தா3
4ஸ்ரீ மாதவே நீ 5சா2யேதுல(னொ)கனி கா3ஞ்ச க3லனே
ஏமனி செப்புது3 தே3வீ நுதிம்ப நாது3 வஸ1மா
ஈ மஹிலோ 6நீ த3ய க3ல்கி3 நா ப4யம்பு3 தொலிகே3னோ (நின்னே)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நின்னே/ நம்மிதி/ நிஜமுக3/ க3தி/ லோகமுலோ/
உன்னையே/ நம்பினேன்/ உண்மையாக/ புகலென/ உலகத்தினில்/
அனுபல்லவி
நன்னு/-அட3 சலுபக3/ நா/ விசாரமு/ தீ3ர்சி/-
என்னை/ புறக்கணிக்காது/ எனது/ கவலையினை/ தீர்த்து/
அம்போ3-ருஹ/-ஆனனா/ தி3வ்ய-தர/ ஜூசி/ ப்ரஸன்ன/ முக2மு/ (நின்னே)
மதி (தாமரை)/ முகத்தினளே/ தெய்வீகமாக/ நோக்குவாய்/ இனிய/ முகத்துடன்/
சரணம்
நீ/ மஹாத்ம்யமு/ எவரே/ நிதா3னிம்ப/ ஸ1க்யமு கா3து3/ க3தா3/
உனது/ பெருமையினை/ எவருமே/ ஆழம் காண/ இயலாது/ அன்றோ/
ஸ்ரீ/ மாதவே/ நீ/ சா2யேதுல/-ஒகனி/ கா3ஞ்ச/ க3லனே/
ஸ்ரீ/ மாதா/ உனது/ நீழலையும் அணுகுவோர்/ ஒருவரையும்/ காண/ இயலேனே/
ஏமனி/ செப்புது3/ தே3வீ/ நுதிம்ப/ நாது3/ வஸ1மா/
என்னவென/ சொல்வேன்/ தேவீ/ (உன்னை) போற்றவும்/ எனது/ வசமா/
ஈ/ மஹிலோ/ நீ/ த3ய/ க3ல்கி3/ நா/ ப4யம்பு3/ தொலிகே3னோ/ (நின்னே)
இந்த/ புவியில்/ உனது/ தயை/ கிடைத்து/ எனது/ அச்சம்/ தொலையுமோ/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
4 - ஸ்ரீ மாதா - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அம்மையின் முதலாவது பெயர்.
Top
விளக்கம்
1 - நன்னட3 சலுபக3 - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, 'என்னுடன் பேசுவாய்' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சொற்களுக்கு, அத்தகைய பொருளேதும் இல்லை. இந்த சொற்களை, 'நன்னு அட3 சலுபக3' என்று பிரிக்கலாம். ஆனால், தெலுங்கில், 'அட3' என்ற சொல்லுக்கு, இவ்விடத்தில் பொருந்தும்படியான பொருளேதும் இல்லை. என் சிற்றறிவுக்கு எட்டியவரை, இது, 'கன்னட3 சலுபக3' என்றிருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். அதற்கு 'புறக்கணிக்காது' என்று பொருளாகும்.
2 - அம்போ3-ருஹானனா - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, 'தாமரை முகம்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. சம்ஸ்கிருதத்தில், 'தண்ணீரு'க்கு, 'அம்பு3' என்றும் 'அம்ப4ஸ்' என்றும் இரண்டு சொற்களுள்ளன. இவற்றின் தெலுங்கு வடிவம், 'அம்பு3வு' ஆகும். எனவே, இது, 'அம்போ4-ருஹானனா' என்றோ 'அம்பு3-ருஹானனா' என்றோ இருக்கவேண்டும்.
Top
2 - அம்போ3-ருஹானனா - புத்தகங்களில், இதற்கு, 'தாமரை முகம்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'அம்போ3-ருஹ' என்பதற்கு, 'தாமரை' யென்றும் 'மதி' யென்றும் பொருளாகும். முகம், பொதுவாக, மதிக்குத்தான் ஒப்பிடப்படும். எனவே, 'மதி முகம்' என்பது மிக்கு பொருந்தும் என்று நான் கருதுகின்றேன்.
3 - ப்ரஸன்ன முக2மு - இனிய முகம். இச்சொற்களின் வடிவம் சரியாக இல்லை. 'இனிய முகத்துடன்' என்பதுதான் இவ்விடம் பொருந்தும். எனவே 'ப்ரஸன்ன முக2முதோ' என்றிருக்கவேண்டும் என்று நான் கருதுகின்றேன்.
4 - ஸ்ரீ மாதவே - இச்சொல்லின் வடிவம் சரிவர விளங்கவில்லை. ஆயினும் இதற்கு 'ஒ ஸ்ரீ மாதா' என்று பொருள் கொள்ளப்பட்டது.
Top
5 - சா2யேதுல - நிழலை அணுகுவோர். இந்த சம்ஸ்கிருதம்-தெலுங்கு கலந்த சொல்லின் வடிவோ, பொருளோ சரியாக விளங்கவில்லை. புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள பொருளே இங்கும் ஏற்கப்பட்டது.
6 - நீ த3ய க3ல்கி3 நா ப4யம்பு3 தொலிகே3னோ - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, 'உனது தயை கிடைத்து, அச்சம் தொலையுமோ?' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கு, 'உனது தயை கிடைத்தாலும், அச்சம் தொலைந்ததா?' என்று பொருளாகும். அத்தகைய பொருள் இவ்விடத்தில் பொருந்தாதாகையால், புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருளே சரியென ஏற்கப்பட்டது. ஆனால், அதற்கு, 'தொலகு3னா' என்றிருக்கவேண்டும்; ('தொலிகே3னோ' என்றல்ல).
Top
அனுபல்லவியின் சொற்களுடன் பொருள் நிறைவு பெறவில்லை. அனுபல்லவியினை, பல்லவியுடன் இணைக்கவும் இயலாது.
இத்தனை சிறிய கீர்த்தனையில், இத்தனைக் குழப்பங்கள் இருப்பது வியக்கத்தக்கது. எனக்குத் தெரிந்தவரை, இந்த கீர்த்தனை மிகவும் பழுதுபட்டுள்ளது அல்லது சியாமா சாஸ்திரி இந்த கீர்த்தனையினை இயற்றினாரா என்பது ஐயத்திற்குரியது.
தெய்வீகமாக - கருணையுடன் என.
நீழலை அணுகுவோர் - அம்மையின் நிழலுக்கும் நிகரல்லர் என.
Top